மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தீர்த்த உற்சவம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 2 July 2025

மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தீர்த்த உற்சவம் !

df6784bf-6e9c-4dac-bff5-3b76f78d8bda

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு கூழாவடி 37ஆம் கிராமம்  அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலய ஆனி உத்தர மகோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று (02-07-2025) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.


இதன்போது வசந்த மண்டப மற்றும் மஞ்சள் பூசைகள் என்பன இடம்பெற்று தீர்த்தமாடுவதற்காக தும்பாலையில் உள்ள புனித கங்கையில்  நூற்றுக்கணக்கில் பக்த அடியார்கள் கலந்து கொண்டதுடன் அங்கு அபிஷேக பூசைகள் இடம்பெற்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

3bbfad94-b75b-43b0-a1d6-ad6e5a20ee27

கடந்த திங்கட்கிழமை (23-06-2025)ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (29-06-2025) ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், திங்கட்கிழமை (30-06-2025)ஆம் திகதி திரு வேட்டைத் திருவிழா பழனி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றன.


செவ்வாய்க்கிழமை (01-07-2025)ஆம் திகதி சப்பறத்திருவிழா இடம் பெற்றது.

b704d087-1645-4c47-a563-78d0e5bae624

இன்று(02-07-2025)ஆம் திகதி  புதன்கிழமை காலை  தும்பாலையில் உள்ள புனித கங்கையில்  தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.


உற்சவ பூசைகள் யாவும் மகோற்சவ கால பிரதம குரு சிறப்பு சொற்பொழிவாளர்  ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.சின்னையா கிருபாகர குருக்கள்  தலைமையில் இடம்பெற்றது.

88736670-e56a-44de-abdf-5878ca99f994


(ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad