சவூதி அரேபிய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் அழைப்பின் பேரிலும் இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் துாதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியின் சிபாரிசின் பேரிலும் இம்முறை 20 பேர் இலவசமாக ஹஜ் செய்வதற்காக வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதன் போது இலவச ஹஜ் கடமையினை மேற்கொள்ளுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நிகழ்வு இன்று (26) கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் இடம் பெற்றது.
குறித்த தெரிவில் சம்மாந்துறை ஊடக மையத்தில் ஆலோசகரும் சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சட்ட முதுமானி அரச சட்டத்தரணி எம்.ஏ.எம்.லாபீர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment