மட்/பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று கோட்ட கல்வி வலயத்தின் மட்/பட் /தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியானது பாடசாலையின் அதிபர் மு.அருந்தவகுமார் தலைமையில் இடம் பெற்றன.
விளையாட்டுக்கலானது விளையாட்டு உத்தியோஸ்தர் ந.பங்கஜன் அவர்களின் நெறிப்படுதலின் கீழ் பாரதி இல்லம் , நாவலர் இல்லம் ஆகிய இல்லங்களுக்கான போட்டியானது நேற்று முன்தினம் (10) மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றனர்.
பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திரு.சி.சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட காணி சீர் திருத்த ஆணையாளர் மெ.விமல்ராஜ் மற்றும் போரதீவுப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராஜா, வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொன்டனர்.
விளையாட்டில் வெற்றி பெற்ற 1ஆம் இடத்தினை பாரதி இல்லமும் , 2ஆம் இடத்தினை நாவலர் இல்லமும் வெற்றி பெற்றன.விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கின்னம் சான்றுதல்கள் வழங்கப்பட்டனர்.
( ரஞ்சன் )
No comments:
Post a Comment