முதலாம்தர மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வுகளுக்கு அமைவாக இன்று ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள பாலக்காட்டு வெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் நேற்று (29) சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.ரீ.ஜஃபர்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அத்தியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் ஆர்.ஜுனைதீன் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக கிராமசேவை அதிகாரி எம்.எம்.அன்வர் சதாத் கலந்து கொண்டதுடன் பாடாசலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் தர மணாவர்கள் முதலாம் தர மாணவர்களை தொப்பி அணிவித்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.(எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment