அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய "உங்களது இரத்தத் துளிகளால் உயிர் களை காப்பாற்றுங்கள்" என்ற தொனிப்பொருளில் அமைந்த இரத்ததான நிகழ்வு
இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் (2023.05.29) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவ பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment