இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ 06ம் கட்ட இறுதி ஒருநாள் பயிற்சி பட்டறை.....!
மனித மேம்பாட்டு அமைப்பினால் பொது இளைஞர், யுவதிகள் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு என்று , 6 கட்டங்களாக நடைபெற்ற இத் தலமைதைதுவப் பயிற்சி பட்டறையின் இறுதிக் கட்ட நகர்வு.
தன் நம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர் யுவதிகளினை உருவாக்கல் எனும் தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு (27.05.2023) சனிக்கிழமையன்று வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில், இளைஞர் - யுவதிகளுக்கான தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சியானது வழங்கப்பட்டது.
HDA அமைப்பின் ஸ்தாபக தலைவர், எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் அவர்களின் வழிகாட்டலிலும், சாய்ந்தமருது அமைப்பாளர் ஆர். அல்முன்தஸீர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், அமைப்பின் வாழைச்சேனை பிரதேச அமைப்பாளரான ZF.ஸிஹானி, ஓட்டமாவடி பிரதேச ஒருங்கினைப்பாளரான ZF.ஸிமானி அவர்களின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியான, லெப்டினன் கேர்னல். எம். எச். எம். ரவூப் அவர்களின் தலமையிலும்,
இளைஞர் - யுவதிகளுக்கான விரிவுரைகளும், பயிற்சிகளும், களச்செயற்பாடுகளும் நடாத்தப்பட்டது.
இப் பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் - யுவதிகள் கலந்து சிறப்பித்தனர்.
அன்று மாலை லெப்டினன் கேர்னல். எம். எச். எம். ரவூப் அவர்களினால் கலந்து கொண்டு , சிறப்பித்த இளைஞர் - யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment