மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் விமரிசையாக நடைபெற்ற கிழக்கு மாகாணப் பொங்கல் விழா.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 January 2026

மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் விமரிசையாக நடைபெற்ற கிழக்கு மாகாணப் பொங்கல் விழா.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளியில் நேற்று முன்தினம்  (23) கிழக்கு மாகாணப் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர தலைமையில் இந்த விழா நடைபெற்றது. ​கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

​மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதம செயலாளர், பிரதிச் செயலாளர் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் , உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.


எமது வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள உங்கள் அழுத்தவும். 👇👇

​பாரம்பரிய முறைப்படி தமிழர்களின் கலாசார விழுமியங்களுக்கு ஏற்ப, வயலில் நெல் அறுவடை செய்யப்பட்டு, கிராமிய முறைப்படி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பொங்கல் விழா சிறப்பிக்கப்பட்டது.

​விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. ​கலைத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் நிகழ்வில் பங்களித்தவர்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.








                                                                        (ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad