வெள்ளிமலை பிள்ளையார் அ. த. க. பாடசாலையின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 31 January 2025

வெள்ளிமலை பிள்ளையார் அ. த. க. பாடசாலையின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

363be2bb-3852-4c1d-a70c-7be5f58f7983

கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நேற்று (30) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நடைபெற்றது.

53aaa2a5-ed07-44fd-829c-707f8703d6dc

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/வெள்ளிமலை பிள்ளையார் அ. த. க. பாடசாலையின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

0e6d4df4-1b64-42fb-8419-d16e8657cbbf

இதற்கமைவாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு.த.சேரலாதன் தலைமையில் நடைபெற்றது.

29804d0e-1193-43e5-a242-1ea38af2323c

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை இன் முகத்தோடு வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பும் கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது

01e812ff-d370-4a51-bd71-baa7c7d9e299

இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் இப் பாடசாலையின் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் திரு.எஸ்.சிறிதரன் பாடசாலை பழைய மாணவர்சங்கம்,பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் , ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

                                                                           ( ரஞ்சன் ) 

No comments:

Post a Comment

Post Top Ad