ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியாவில் கைதிகள் விடுதலை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 13 April 2024

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியாவில் கைதிகள் விடுதலை !


வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்றைய தினம் 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறிய குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.


அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளும் விடுவிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கேற்பில் கைதிகளை விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad