35ஆம் கிராமம் சிவமுத்து மாரியம்மன் ஆலய பூசகர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 December 2025

35ஆம் கிராமம் சிவமுத்து மாரியம்மன் ஆலய பூசகர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  35ஆம் கிராமம் சிவமுத்து மாரியம்மன் ஆலய பூசகர் 38வயதான நல்லதம்பி பிரகாஷ் என்பவர் நேற்று  (25) சுகயினம் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார்.


 சம்பவம் தொடர்பில்...

அதிகாலை திருவெம்பாவை விரத பூசைக்காக காரைதீவு கிராமத்தில் இருந்து 35ஆம் கிராமத்திற்கு வர ஆயத்தமான போது திடீர் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும் காரைதீவு கிராமத்தை வசிப்பிடமாக உள்ளவர்.


இளம் பூசகரின் திடீர் உயிரிழப்பு கிராமத்தையும் சோகத்திற்குள்ளாக்கியது. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். உங்கள் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.


(ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad