மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சில பகுதிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி நவகிரி நீர்பாசன தினைக்கள பொறியலாளர் S.கிசோக்காந்தின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று(15-12-2023)ஆம் திகதி நவகிரிக் குளத்தின் ஒரு வான் கதவு, 1 அடி திறந்து விடப்பட்டுள்ளது.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இதன்காரணமாக இன்று(16-12-2023)ஆம் திகதி மட்டக்களப்பு – வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இவ்வீதியின் ஊடாக போக்குவரத்துச் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நவகிரிக் குளத்தின் வடிச்சல், வாய்க்கால்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment