தேர்தல் நடத்த இதுவே பொருத்தமான தருணம்- பெசில் ராஜபக்ஷ. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 5 December 2022

தேர்தல் நடத்த இதுவே பொருத்தமான தருணம்- பெசில் ராஜபக்ஷ.

photo_2022-12-05_21-26-39

நாட்டில் தேர்தல் நடத்துவதற்கு இது பொருத்தமான நேரமாகும் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று (5) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய தேர்தல்களில் வெற்றி பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த பெசில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கும் மன்னிப்பும் கோரினார். எவ்வாறாயினும், பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

tamilaga%20kural


அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகைமை தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


மேலும், மீண்டும் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியாமல் போனதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதியின் பணிகளை பாராட்டினார். 

share%20it%20-%20tamilagakural

No comments:

Post a Comment

Post Top Ad